Skip to main content

ரஸ்யா உக்ரைன் மோதல் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்குமா?

கடந்த சில வாரங்களாக ஐரோப்பாவின் உக்ரைன் ரஸ்ய எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. உக்ரைன் ரஸ்யா எல்லைப்பிரச்சினை சோவியத் ஒன்றியம் உடைந்த காலம் தொட்டே இருந்து வருகிறது ஆனால் சமீபகாலமாக மோதல் நிலை உக்கிரமடைந்துள்ளது. அமெரிக்காவின் நட்பு நாடுகளின் கூட்டணி என்றழைக்கப்படும் நேட்டோ வில் அமெரிக்காவின் உந்துததால் உக்கிரைனை சேர்க்க பார்க்கிறது இதனை ரஸ்யா துளியளவும் விரும்பாது அதற்கான காரணம் தனது எதிரி நாடான அமெரிக்காவின் கூட்டணியில் உக்ரைன் இணைந்தால் பாரிய பாதுகாப்புப்பிரச்சினைகளையும் அமெரிக்காதனது ராணுவத்தளபாடங்கள், ஏவுகணைகளை உக்ரைனில் நிறுவமுடியும் ஆதலால் உக்ரைனை போர்மூலம் வெல்ல எண்ணுகிறது. 


உக்ரைன் முன்னைய சோவியத்தொன்றியத்தின் பகுதியாகும் 2014 ல் கிரீமியா தீபகர்ப்பம் பொதுவாக்கெடுப்பின் மூலம் ரஸ்யாவுடன் இணைக்கப்பட்டது. ரஸ்ய மொழி பேசும் பலர் உக்ரைனில் வாழ்கிறார்கள் மேலும் பல மருத்துவர்களை உருவாக்கும் மருத்துவ மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த நாடு உக்ரைன்.நிலைமை மோசமாடைந்துள்ளதற்கான எடுத்துக்காட்டாக அமெரிக்கா தனது தூதரக அதிகாரிகளை நாட்டிற்க்கு திரும்ப அழைத்துள்ளது போர்க்கப்பல்கள் அத்திலாந்திக் சமுத்திரங்களை ஊடறுத்து உக்ரைனை நெருங்கிக்கொண்டிருக்கின்றது.விமானங்கள் ஊடாக பல ஏவுகணைகள் ஆயுதங்கள் உக்ரைனில் குவிக்கப்படுகின்றன. உக்ரைன் அதிபர் பெரும் போருக்கு நாட்டுமக்களை தயாராகுமாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுமட்டுமல்லாமல் ரஸ்யா 100,000 படைவீரர்களை உக்ரைன் எல்லையில் குவித்துள்ளது உலகளவில் பீதியை கிளப்பியுள்ளது. உக்ரைன் மீது ரஸ்யா போர் தொடுத்தால் அமெரிக்கா , பிரிட்டன் போன்ற நாடுகள் ரஸ்யாவை தாக்கும் ரஸ்யாவுக்கு ஆதரவாக சீனா,ஈரான் களம் இறங்கும் ஆகவே இதுவோர் உலகப்போராக பரிணமிக்கலாம் என உலக போரியல் வல்லூணர்களால் கணிக்கப்பட்டிருக்கிறது


ரஸ்யா உக்ரைனை தாக்கவேண்டிய கட்டாயத்தினுள் தள்ளும் காரணியாக உக்ரைன் நேட்டோவில் இணையும் முடிவு தங்கியுள்ளது.ரஸ்யாவின் விளாடிமிர் புடின் அவர்கள் உக்ரைனை எச்சரித்திருக்கிறார் மேலும் ரஸ்யா தனது முளுபலத்தைக்கொண்டு தாக்கினால் உக்ரைன் நிர்மூலமாகிப்போகும்.உக்ரைனில் வாழும் மக்கள் அத்தியாவசியப்பொருட்களை சேகரித்து வைத்துக்கொண்டுள்ளனர்.இவ் போர்ப்பதட்டம் முடிவின்றி செல்கிறது.
எதுவாக இருப்பினும் போர்மூளுமாயின் Covid தொற்றுப்பரவல் மற்றும் பொருளாதார மந்த நிலையில் மேற்கத்தேய நாடுகள் நிட்சயம்விரும்பாது.ரஸ்யாமீது பொருளாதார தடைகளை விதித்து அடிணிய அமெரிக்கா எடுத்த முடிவுகள் தோல்வியுற்றதுடன் ஆபத்தான வெடிகுண்டு போல எப்போதும் எக்கணமும் வெடிக்க தயாராக உள்ளது.

Comments

Popular posts from this blog

உக்ரேன் Vs ரஸ்யா போரால் சரிவடைந்த கனடாவின் பொருளாதாரம்.

  இந்த உக்ரேன் Vs ரஸ்யா போரானது February 20,2014 Cremea ( Crimean peninsula ) ரஸ்யா ஆக்கிரமித்ததிலிருந்து இந்த போரானது தொடங்குகிறது அதன் பின்னர் February 24 2022 ரஸ்யாவானது உக்ரேனை ஆக்கிரமித்ததிலிருந்து தற்போதுவரை இந்த போரானது நடைபெற்றுக்கொணடிருக்கிறது. இந்த போரால் இரண்டு நாடுகளுக்கும் பெரும் பொருளாதாரச்சேதமும்.உயிர்சேதமும் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.இந்த பதிவில் உக்ரேன் Vs ரஸ்யாவுடனான போரால் கனடாவின் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை நோக்குவோம். உக்ரேன் நாடானது ஐரோப்பாவில் ஏழ்மைநாடுகளில் ஒன்றாகும்.அத்துடன் இவ்நாட்டில் ஊழல்கள் அதிகமாக நடைபெறுகின்றன.உக்ரேன் உலகத்தின் ஆயுதங்களுக்கான கறுப்புச்சந்தையாக அறியப்படுகிறது.உலகின் பல பகுதிகளுக்கும் பல அமைப்புக்களுக்கும் ஆயுதங்களை வழங்கும் நாடாகவும் காணப்படுகிறது.கூலிக்காக கொலைசெய்யும் ராணுவத்தையும் கொண்டநாடு மிக முக்கியமாக விவசாயம் சார்ந்த உற்பத்திகளிலேயே தங்கிநிற்கிறது. இந்த உக்ரேன் 1991 வரை அன்றைய USSR (The union of Soviet socialist Republics) லிருந்து பிரிந்து 24,August 1991 தனிநாடாக பிரகடணப்படுத்தப்பட்டது.இந்த USSR லிருந்து...

St. Paul இடைத்தேர்தலில் Don Stewart வெற்றி 30 வருட Liberals கோட்டை தகர்ப்பு

    கனடா மக்கள் அதிகம் எதிர்பார்த்த விடயங்களில் இந்த இடைத்தேர்தல் மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. கடந்த 30 வருடங்களாக liberal கட்சியின் பலம் பொருந்திய கோட்டையாக St. Paul இருந்துவந்தது. கனடா முழுவதும் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்தி நிலை இருந்துவரும் நிலையில் குறிப்பாக liberals ன் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டிநிற்கும் என எதிர்பார்க்கப்பட்டது அது போலவே மக்கள் மாற்றத்தை விரும்பி Conservative கட்சியை தெரிவு செய்துள்ளனர். இந்த முடிவானது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளை எதிரொலிப்பதாக உள்ளது. கடந்த பதிவில் தேர்தல் கருத்துக்கணிப்புக்கள் கனடா மாற்றத்தை விரும்புகிறது எனபதை குறிப்பிட்டிருந்தேன்."ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது போல் liberal கட்சியானது அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பாக Ontario மாகாணத்தில் Toronto போன்ற பகுதிகளில் மிகப்பெரும் தோல்விகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட Leslie church ஐ காட்டிலும் 590 வாக்குகள் அதிகம் பெற்று co...

UK Civil WAR பற்றி எரியும் பிரிட்டன்!!!

  பிருத்தானியாவில் ஓர் நடன பாடசாலை வளகத்திலே 3 சிறுமிகள் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர் தொடர்பான அடையாளங்கள் தவறான முறையில் பகிரப்பட்டது.குறித்த கொலையாளி 17வயதுடையவன் அவன் இஸ்லாமியன் என தீவிர வலதுசாரிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிரிட்டனில் பல பாகங்களில் வெறுப்பு போராட்டங்கள் வெடித்தன தொடர்ந்து கடைகள்,வீடுகள்,கார்கள் என்பன போராட்டக்காரர்களால் அழித்து சேதமாக்கப்பட்டது. இதுவரை 400 ற்கு மேற்பட்டவர்கள் நாடுமுழுவதிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள்நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.பிருத்தானியாவின் குடிவரவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் இந்த வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சாலைகளில் தீவிர வலதுசாரிகள் கடைகள்,வணிகநிறுவனங்களை தாக்கி கொள்ளையிடுவதையும்,போலீசாரை பட்டாசுகள் வைத்து தாக்குவதும்,”Islam Out” போன்ற வாசங்களை உச்சரித்தபடியும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முன்னிற்கும் கோட்பாடாக “இங்கிலாந்து ஆங்கிலேயருக்கே” என்பதாகும்.மேலும் வன்முறைகள் மூளாமல் இருக்க பிரதமர...