Skip to main content

Posts

Showing posts with the label Srilanka

அரசியல் பழகும் சிங்களவர்களும் தடையாய் இருக்கும் இனவாதமும்

சுதந்திரம் பெற்றகாலத்திலிருந்தே பௌத்தமத ஆதிக்கமும் அதன் இனவாத கருத்தியல்களின் வெளிப்பாடாகவே இலங்கை அரசியல் இருந்து வருகிறது ஆனால் இன்றையகாலகட்டத்தில் நிலைமை மாற்றமடைந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. நாட்டில் இடம்பெறும் போராட்டங்கள் இளையசமுதாயத்தை சிந்திக்கவைத்துள்ளதுடன் போராடும் மநோநிலையும் தூண்டியுள்ளது என்றால் மிகையாகாது. இவ்வளவு காலமும் பௌத்தபேரினவாதத்தில் மூள்கியிருந்த மக்கள் தங்கள் பொருளாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டு எதிர்காலம் பற்றிய பயத்தை தோற்றுவித்ததையடுத்து தங்களை சுயபரிசோதனை செய்துகொண்டதன் விளைவு பெரும்பான்மையானோர் பௌத்த பேரினவாதம் பயனற்ற மற்றும் ஆபத்தான ஒன்று என்பதை உணர்ந்துள்ளனர். இந்த தெளிவு எதிர்கால நாட்டின் வளர்ச்சிக்கும் சிறுபான்மை மக்களின் குரல்களுக்கு வலுச்சேர்பதாக அமையும் எனலாம். சிங்களவர்கள் தற்காலத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை என்றும் சந்தித்ததில்லை அவர்கள் பொறுமை எல்லைமீறும் போது அதன் வெளிப்பாடு பல கேள்விகளை எழுப்பியது? நாட்டின் இந்நிலைக்கு யார்காரணம்? ஆட்சி அதிகாரங்கள் எவ்வாறு ஒரு குடும்பத்தின்கீழ் சர்வாதிகாரமாக செயற்படுகிறது? ஊழல் குற்றச்சாட்டுகள் அம்பல...

புதிய பிரதமராக ரணில் விக்கரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார்.

நாட்டில் நிலவும் அரசியல்குழப்பங்களுக்கு மத்தியில் ஐனாதிபதி கோத்தபய ராஐபக்சவால் புதியபிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவிப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார். முன்னாள் பிரதமர் மகிந்த வாழ்த்துத்தெரிவுத்துள்ளார். கடந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே தோற்கடிக்கப்பட்டார் தேசியப்பட்டியலின் மூலம் நாடாளுமன்றம் நுளைந்தார் இவர் தற்போது 6 வது தடவையாக பிரதமராக பதவியேற்றுள்ளார் உலகில் அதிகதடவைகள் பிரதமர் பதவி வகித்தவர் என்ற சாதனையைபடைத்துள்ளார். இவரின் பதவியேற்பிற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். மக்கள் பழைய ஆட்சிஅதிகாரங்களின் மீது ஏமாற்றமும் வெறுப்பும் கொண்டுள்ளனர் மீண்டும் ரணில் பிரதமர் ஆவது ராஐபக்சாக்களை காப்பாற்றும் சதித்திட்டமாக கருதுகின்றனர். மக்கள் கோத்தாவை வீட்டுக்கு போகுமாறு போராடுகின்றனர் ஆனால் ஐனாதிபதியோ தன்னால் முடிந்த தந்திரங்களைச்செய்து ஆட்சியில் நீடிப்பதே அவரின் திட்டம்.இப்போது நாடாளுமன்றில் ரணில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் அதில் சிக்கலும் உள்ளது எதிகட்சியினர் ஆதரவு அளிக்கமாட்டார்கள் 25 பேர் ஆதரவாக உள்ளனர் என ரணில் அணி கூறுகிறது. எதிர்க்கட்சியினருக்கும் ஐனாதிபதி ...

பொருளாதார அவசர நிலையும் ஓர் புதிய வாழ்க்கை முறைக்கான தொடக்கம்

2020 ன் ஆரம்பத்தில் பெரிதான ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஆரம்பித்து தற்பொழுது இலங்கை அரசு பொருளாதார அவசர நிலையினை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது. இன்நிலைக்கு Covid-19 ன் மீது முற்றுமுழுதாக குற்றம் சொல்லிவிடமுடியாது இங்கு தீட்டப்பட்ட திட்டங்கள் தொடர்தோல்விகளை சந்திக்க அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சிக்கலும் ஒன்று சேர்ந்து நாட்டை முடக்கிவிட்டுள்ளது என்பதே உண்மை. கடந்த சில மாதங்களாக அரசாங்கத்திடம் அரசாங்கத்திடமிருந்து வெளியாகும் அறிவிப்புகள் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.எதைச்செய்தால் இப்பிரச்சினைகளில் இருந்து மீண்டு வரலாம் என்பதே இலங்கை வாழ் மக்களின் பரிதவிப்பு. இந்த கள எதார்த்தம் ஓர் நிட்சயமற்ற குழப்பத்தையும் எதிர்காலம் குறித்த எச்சரிக்கை மணியை ஒலிக்கச்செய்துள்ளது. இந்நிலைமை மேலும் மோசமடையாமல் இருப்பதற்கு இறைவனை பிரார்த்தித்துக்கொண்டு இந்நிலைமை எவ்வாறு பரிணமித்தது என்பதை அலசியாகவேண்டும். இதை வாசித்துக்கொண்டிருக்கும் யாராக இருந்தாலும் உலகின் எந்த இடத்தில் வசித்தாலும் நம் பிறப்பிடத்தின் தற்போதைய நிலையை அறிந்தே ஆக வேண்டும்.தவறுகள் மற்றும் ...