நாட்டில் நிலவும் அரசியல்குழப்பங்களுக்கு மத்தியில் ஐனாதிபதி கோத்தபய ராஐபக்சவால் புதியபிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவிப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் மகிந்த வாழ்த்துத்தெரிவுத்துள்ளார். கடந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே தோற்கடிக்கப்பட்டார் தேசியப்பட்டியலின் மூலம் நாடாளுமன்றம் நுளைந்தார் இவர் தற்போது 6 வது தடவையாக பிரதமராக பதவியேற்றுள்ளார் உலகில் அதிகதடவைகள் பிரதமர் பதவி வகித்தவர் என்ற சாதனையைபடைத்துள்ளார்.
இவரின் பதவியேற்பிற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். மக்கள் பழைய ஆட்சிஅதிகாரங்களின் மீது ஏமாற்றமும் வெறுப்பும் கொண்டுள்ளனர் மீண்டும் ரணில் பிரதமர் ஆவது ராஐபக்சாக்களை காப்பாற்றும் சதித்திட்டமாக கருதுகின்றனர்.
மக்கள் கோத்தாவை வீட்டுக்கு போகுமாறு போராடுகின்றனர் ஆனால் ஐனாதிபதியோ தன்னால் முடிந்த தந்திரங்களைச்செய்து ஆட்சியில் நீடிப்பதே அவரின் திட்டம்.இப்போது நாடாளுமன்றில் ரணில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் அதில் சிக்கலும் உள்ளது எதிகட்சியினர் ஆதரவு அளிக்கமாட்டார்கள் 25 பேர் ஆதரவாக உள்ளனர் என ரணில் அணி கூறுகிறது. எதிர்க்கட்சியினருக்கும் ஐனாதிபதி பதவி விலகவேண்டும் என்ற நோக்கமே உள்ளது அவர்கள் ரணிலை ஏற்க்கமாட்டார்கள் மாறாக சயித் ஐனாதிபதியாக அல்லது பிரதமராக ஆக்கப்பட வேண்டும் என்பதே விருப்பம்.
இங்கு அரசியல் சதுரங்க ஆட்டத்தில் காய்கள் நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் போது அதில் அரசியல் லாபம் தேடும் கூட்டம் தங்கள் கைவரிசையை காட்டுகிறார்கள். காலி முகத்திடல் போராட்டத்தை தணியச்செய்த புதிய பிரதமர் ரணிலின் நியமனம் வெற்றி அழித்ததா இல்லையா என்பதை வரும்சிலநாட்களில் பார்க்கலாம்.ஒரு விடயம் தெளிவாகத்தெரிகிறது மக்கள் தெளிவாக உள்ளனர் ரணிலை எதிர்ப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் ரணில் ராஐபக்சாக்களை எதிர்க்காமல் அரசியல் செய்தால் அவரும் மகிந்த போல் விரட்டியடிக்கப்படுவார்.
மக்கள் அரசியலை பழக,கற்க ஆரம்பித்துவிட்டார்கள் வெற்று நாடகங்களுக்கு இனி இங்கு இடமில்லை
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
இந்த உக்ரேன் Vs ரஸ்யா போரானது February 20,2014 Cremea ( Crimean peninsula ) ரஸ்யா ஆக்கிரமித்ததிலிருந்து இந்த போரானது தொடங்குகிறது அதன் பின்னர் February 24 2022 ரஸ்யாவானது உக்ரேனை ஆக்கிரமித்ததிலிருந்து தற்போதுவரை இந்த போரானது நடைபெற்றுக்கொணடிருக்கிறது. இந்த போரால் இரண்டு நாடுகளுக்கும் பெரும் பொருளாதாரச்சேதமும்.உயிர்சேதமும் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.இந்த பதிவில் உக்ரேன் Vs ரஸ்யாவுடனான போரால் கனடாவின் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை நோக்குவோம். உக்ரேன் நாடானது ஐரோப்பாவில் ஏழ்மைநாடுகளில் ஒன்றாகும்.அத்துடன் இவ்நாட்டில் ஊழல்கள் அதிகமாக நடைபெறுகின்றன.உக்ரேன் உலகத்தின் ஆயுதங்களுக்கான கறுப்புச்சந்தையாக அறியப்படுகிறது.உலகின் பல பகுதிகளுக்கும் பல அமைப்புக்களுக்கும் ஆயுதங்களை வழங்கும் நாடாகவும் காணப்படுகிறது.கூலிக்காக கொலைசெய்யும் ராணுவத்தையும் கொண்டநாடு மிக முக்கியமாக விவசாயம் சார்ந்த உற்பத்திகளிலேயே தங்கிநிற்கிறது. இந்த உக்ரேன் 1991 வரை அன்றைய USSR (The union of Soviet socialist Republics) லிருந்து பிரிந்து 24,August 1991 தனிநாடாக பிரகடணப்படுத்தப்பட்டது.இந்த USSR லிருந்து...


Comments
Post a Comment