இலங்கையில் கடந்த சில மாதங்களாக ஆர்பாட்டங்கள்,வன்முறைகள் என மக்கள் கொதிநிலையிலேஇருந்துவந்தனர் அதன் விளைவாக மக்கள் ஐனாதிபதிமாளிகையை முற்றுகையிட்டு தங்கள் பலத்தை காண்பித்தனர். பதில் ஐனாதிபதியாக பதவியேற்ற ரணில் தனது வாழ்நாள் ஆசைய ஐனாதிபதி பதவியை அடைந்தே தீரவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். அவர் நினைத்ததை கச்சிதமாக அடைந்துவிட்டார் இது அவ்வளவு எளிதில் கைகூடவில்லை தனது அரசியல் ராஐதந்திரங்களை நாசூக்காக செயல்படுத்தி வெற்றிகண்டுள்ளார்.
இறுதிநேரத்தில் சயித் பிரேமதாச போட்டியில் இருந்து விலகி டலஸ் அழகபெருமவிற்கு வழங்கிஆதரவும் நாம் எண்ணிப்பார்க்காத விடயம்ஆம் ஆனால்நான் இதை எதிர்பார்திருந்தேன் அரசியலில் அதிகாரப்போட்டிகளில் பேரங்கள் பேசப்படுவது வழமை இதில்திரைக்குப்பின்னால் இழுபறிகள் மட்டும்நடந்தனவே தவிர எந்தவித கோரிக்கைகள் முன்வைத்து மக்கள் நலனுடன் எவரும் செயற்படவில்லை.
இங்குதான் ரணிலின் தந்திரங்கள் வேலை செய்தன எவரும்தனித்துஇல்லை ஒருகூட்டம் சயித்தின் கைஅசைவில் உள்ளன மற்றொன்று முதிர்ந்து தளர்ந்த சம்பந்தனின் கூட்டமைப்பு இங்குஅந்த தந்திரகார நரி கூட்டமைப்பின் தலைவரை தொலைபேசியில் அணுகி தன் விருப்பத்தை தெரிவித்து சில அடிகள் பின்வாங்கி நின்றது இதையேதான் அந்த நரி மலையக பாராளுமன்ற உறுப்பினரை அணுகி நான் தான் அடுத்த ஐனாதிபதி இனி சேர்ந்து பணியாற்றுவோம் இலங்கையை சரிவிலிருந்து மீட்போம் என்று இடியை இறக்க மலையக அணி கலக்கத்துடன் கூடிய குளப்பத்தில்மூள்க தன்னை இந்த தேர்தலில் பேசுபொருளாக காட்டாமல் ஒதுங்கி இருப்பது போல் காட்டிக்கொண்டு டலஸ் Vs ரணில் என்ற போலி பிம்பத்தை கட்டியமைத்து வென்றார்.
இதுபோன்ற ராஐதந்திரங்கள் ரணிலால் மட்டுமே சாத்தியமானது. போராட்டத்தில் சேதமான MP களுக்கு புதிய வீடு , ரஞ்சன் ராமயக்கவை பொதுமன்னிப்பில் விடுதலை என்று ஆளும் கட்சியினரையும் , பொதுமக்களையும் சற்று சிந்திக்கவைத்தார் அறிவிப்புக்கள் தினம் தினம் வநதன. இனி அவரது ஆட்சி எவ்வாறு இருக்கப்போகிறது என்பதனை கணிப்பது கடினம்.
கனடா மக்கள் அதிகம் எதிர்பார்த்த விடயங்களில் இந்த இடைத்தேர்தல் மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. கடந்த 30 வருடங்களாக liberal கட்சியின் பலம் பொருந்திய கோட்டையாக St. Paul இருந்துவந்தது. கனடா முழுவதும் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்தி நிலை இருந்துவரும் நிலையில் குறிப்பாக liberals ன் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டிநிற்கும் என எதிர்பார்க்கப்பட்டது அது போலவே மக்கள் மாற்றத்தை விரும்பி Conservative கட்சியை தெரிவு செய்துள்ளனர். இந்த முடிவானது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளை எதிரொலிப்பதாக உள்ளது. கடந்த பதிவில் தேர்தல் கருத்துக்கணிப்புக்கள் கனடா மாற்றத்தை விரும்புகிறது எனபதை குறிப்பிட்டிருந்தேன்."ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது போல் liberal கட்சியானது அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பாக Ontario மாகாணத்தில் Toronto போன்ற பகுதிகளில் மிகப்பெரும் தோல்விகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட Leslie church ஐ காட்டிலும் 590 வாக்குகள் அதிகம் பெற்று co...

Comments
Post a Comment