கடந்த 29ம் திகதி Halloween கொண்டாடுவதற்காக பெரும்திரளான மக்கள் Itaewon என்ற குறுகிய ந்திக்குள் நுளையமுற்பட்டு கூட்ட நெரிசலில்சிக்கி மூச்சுத்திணறல்,காயம் காரணமாக 56 ஆண்கள் மற்றும் 97 பெண்கள் பலியாகிஉள்ளனர். இதில் 4 பேர்பதின்மவயதினர் 95 பேர் 20 வயது உடையவர்கள் மற்றும் 32 பேர் 30 வயது உடையவர்கள்.9 பேர் 40 வயதை உடையவர்கள்
13 நபர்களின் வயது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இதில் ஒரு நோர்வே பிரசை மற்றும் ஒரு இலங்கை பிரசை,2 ஐப்பானிய பிரசைகள் மேலும் ஈரானியர்கள்,சீனர்கள்4 பேர்அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Covid-19 கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு நடைபெறும் ஒரு கேளிக்கை நிகழ்வு இதுவாகும். இந்த சனக்கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறிஉள்ளனர். தென்கொரிய அதிபர் யூன்சுக்-யோல் விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் அந்நிய கலாச்சாரம் நமக்கு பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமில்லாது உயிரையே பறிக்கும் என்பது தெளிவாகிறது. தென்கொரியர்கள் Halloween என்ற அமெரிக்க கொண்டாட்டத்தை தங்கள்நாட்டில் கொண்டாடி பல உயிர்களை இழந்துள்ளனர். மக்கள் 2 வருடங்களுக்கு மேலான Covid-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு ஒன்று கூடும் போது அவர்கள் உற்சாக மிகுதியால் ஏற்படும் விழைவுகளை அரசும்,காவல்துறையும் கணிக்க மறந்துவிட்டது. நாம் எந்த கலாச்சாரத்தில் இருக்கின்றோமோ அதையே பின்பற்றுவோம் இவ்வாறு சனக்கூட்டமான இடங்களில் சற்று எச்சரிக்கை தேவை.
Articles, Day Today News, and more



Comments
Post a Comment