கடந்த 20ம் திகதி அன்று Liz Truss அவர்கள் தனது பிரதமர் பதவியிலிருந்து விலகினார். அதனைத்தொடர்ந்து அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வியில் இந்தியவம்சாவளியைச்சேர்ந்த Rishi Sunak அவர்கள் 100 க்கு மேற்பட்ட கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் உள்ளார். அதிகாரபூர்வமாக பிரதமர் பதவிக்காக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
பிருத்தானியாவில் பொருளாதாரநெருக்கடி,எரிபொருள்விலையேற்றதிட்டம், mini-budget, பணக்காரர்களுக்கு வரிக்குறைப்பு என்பன 45 நாட்களில் Liz Truss அவர்களை பதவிவிலக காரணமானது. இந்நிலையில் கரீபியன் தீவுகளில் சுற்றுலா சென்ற முன்னார் பிரதமர் Boris Johnson அவர்கள் அவசர அவசரமாக பிருத்தானியா திரும்பியுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இவர் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியால் பதவியிலிருந்து அகற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. Boris Johnson, Rishi Sunak, முன்னாள் தற்காப்பு அமைச்சர் Penny Mordant இவர்களில் ஒருவர் பிரதமர் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உக்ரேன் Vs ரஸ்யா போரானது February 20,2014 Cremea ( Crimean peninsula ) ரஸ்யா ஆக்கிரமித்ததிலிருந்து இந்த போரானது தொடங்குகிறது அதன் பின்னர் February 24 2022 ரஸ்யாவானது உக்ரேனை ஆக்கிரமித்ததிலிருந்து தற்போதுவரை இந்த போரானது நடைபெற்றுக்கொணடிருக்கிறது. இந்த போரால் இரண்டு நாடுகளுக்கும் பெரும் பொருளாதாரச்சேதமும்.உயிர்சேதமும் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.இந்த பதிவில் உக்ரேன் Vs ரஸ்யாவுடனான போரால் கனடாவின் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை நோக்குவோம். உக்ரேன் நாடானது ஐரோப்பாவில் ஏழ்மைநாடுகளில் ஒன்றாகும்.அத்துடன் இவ்நாட்டில் ஊழல்கள் அதிகமாக நடைபெறுகின்றன.உக்ரேன் உலகத்தின் ஆயுதங்களுக்கான கறுப்புச்சந்தையாக அறியப்படுகிறது.உலகின் பல பகுதிகளுக்கும் பல அமைப்புக்களுக்கும் ஆயுதங்களை வழங்கும் நாடாகவும் காணப்படுகிறது.கூலிக்காக கொலைசெய்யும் ராணுவத்தையும் கொண்டநாடு மிக முக்கியமாக விவசாயம் சார்ந்த உற்பத்திகளிலேயே தங்கிநிற்கிறது. இந்த உக்ரேன் 1991 வரை அன்றைய USSR (The union of Soviet socialist Republics) லிருந்து பிரிந்து 24,August 1991 தனிநாடாக பிரகடணப்படுத்தப்பட்டது.இந்த USSR லிருந்து...

Comments
Post a Comment