Skip to main content

Mossad தோல்வி இஸ்ரேல் Vs பாலஸ்தீன போர்


 

கடந்த சிலநாட்களாக உலகளவில் இஸ்ரேல் Vs பாலஸ்தீனப்போர் உக்கிரமாக நடந்துவருகிறது. ஊடகங்களில் பெரும்பேசுபொருளாக உள்ள தலைப்பு இதுவாகும். பாலஸ்தீன கிளரச்சியாளர்கள் திடீர் தாக்குதலை மேற்கொண்டனர் தரை, வான்வழியாகவும் நிலக்கீழ் சுரங்கம் வழியாகவும் உள்நுளைந்த Hamas போராளிகள் தாக்குதல்களை மேற்கொண்டனர். Gaza  பிராந்தியத்திலிருந்து 20 நிமிடங்களில் இஸ்ரேலின் பல பகதிகளை இலக்குவைத்து சரமாரி ராக்கெட்தாக்குதல்களை மேற்கொண்டனர் இதனை இஸ்ரேல் தேசம் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.


இந்த முறை தாக்குதல்கள் Gaza பகுதிகளிலிருந்து மட்டும் இடம்பெறவில்லை தென் லெபானில் எறிகணைகள் வீசப்பட்டுள்ளன. தற்போது உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்திய விடயம் என்னவெனில் உலகின் Number one உளவு அமைப்பு என்று அழைக்கப்படும் Mossad ற்கு இந்த தாக்குதல் பற்றி முன்கூட்டியே தெரியவில்லையா அத்துடன் உள்நாட்டுஉளவுஅமைப்பான Shin bet(Shabak) ராணுவ புலனாய்வு பிரிவான Aman என்பனவும் இதை கணிக்க தவறிவிட்டதா? இது ஒரு புலனாய்வு தோல்வியாக உலகம் கருதுகிறது.


எனது தனிப்பட்ட கருத்தின்படி முன்னைய காலங்கள் போல ஹமாஸ் ன் நடவடிக்கைகளை கண்காணிக்க Mossad ஆனது Palestine  னுள் தனது உளவாளிகளை அனுப்பியிருந்தது இதனை ஹமாஸ்  அறிந்துவிட்டது தற்போது அவர்கள் நம்புவது தொழில்நுட்பத்தை ஆகும் ஆனால் அது எந்தளவுக்கு கைகொடுக்கும் என்பது கேள்விக்குறி? முன் எப்போதும் இல்லாதளவு ஹமாஸ் தங்கள் ராணுவ பலத்தை அதிகரித்துள்ளனர்.

இன்னொருவகையில் இதனை நோக்கினால் Mossad இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்திருக்கலாம். முதலில் பலஸ்தீன போராளிகளை தாக்குதலை நடத்தி இஸ்ரேல் பகுதிக்குள் நுளைய வைத்துவிட்டு பின்னர் அவர்களை ஒட்டுமொத்தமாக அழிப்பது அவர்கள் திட்டமாக இருக்கலாம். இதனை மொசாட்டின் தோல்வியாக உலகம் கருதினாலும்இதிலும் ஓர் ராணுவ தந்திரம் ஒளிந்திருக்கிறது. நாம் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும் "இந்த உலகில் தலைசிறந்தவர்கள் என்று எவருமில்லை" வரலாற்றில் குறிப்பிட்ட காலம் முதலிடத்தில் இருப்பார்கள் அவர்கள் அந்த இடத்தை தொடர்ந்து தக்கவைக்க முடியாது அந்த இடத்தை பிடிக்க இன்னொருவர் வருவார் இதுதான் உலக வரலாறு. இந்த உலகில் மனிதநேயத்தைவிட சிறந்த விடயம் வேறு இல்லை வாழும் காலம் சிறியது இறந்தால் ஆறு அடி நிலமே சொந்தம். பொய் புராணக்கதைகளை நம்பி அதற்காக உயிரை  பறிப்பதும் கொல்லுவதும் தவறு. கடவுளின் பிள்ளைகள் எல்லோரும் சமம் இதில் நான் சிறந்தவன் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று யாருமில்லை அதை நம்புவபர்கள் மன நோயாளிகள். உடலின் நிறம்,மொழி,மதம்,இன வேறுபாடுஇன்றி நாம் எல்லோரும் மனிதர்கள் இங்கு சக மனிதர்களை ஆடு,மாடுகளாக நினைப்பவர்கள் மனநோயாளிகள் இந்த மனநோய்க்கு மருந்து மரணம் மட்டுமே. வாழும்வரை மற்றவர்களுக்கு துன்பம் விழைவிற்காமல் வாழ்வதே சிறந்த வாழ்வு 



Comments

Popular posts from this blog

St. Paul இடைத்தேர்தலில் Don Stewart வெற்றி 30 வருட Liberals கோட்டை தகர்ப்பு

    கனடா மக்கள் அதிகம் எதிர்பார்த்த விடயங்களில் இந்த இடைத்தேர்தல் மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. கடந்த 30 வருடங்களாக liberal கட்சியின் பலம் பொருந்திய கோட்டையாக St. Paul இருந்துவந்தது. கனடா முழுவதும் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்தி நிலை இருந்துவரும் நிலையில் குறிப்பாக liberals ன் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டிநிற்கும் என எதிர்பார்க்கப்பட்டது அது போலவே மக்கள் மாற்றத்தை விரும்பி Conservative கட்சியை தெரிவு செய்துள்ளனர். இந்த முடிவானது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளை எதிரொலிப்பதாக உள்ளது. கடந்த பதிவில் தேர்தல் கருத்துக்கணிப்புக்கள் கனடா மாற்றத்தை விரும்புகிறது எனபதை குறிப்பிட்டிருந்தேன்."ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது போல் liberal கட்சியானது அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பாக Ontario மாகாணத்தில் Toronto போன்ற பகுதிகளில் மிகப்பெரும் தோல்விகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட Leslie church ஐ காட்டிலும் 590 வாக்குகள் அதிகம் பெற்று co...

UK Civil WAR பற்றி எரியும் பிரிட்டன்!!!

  பிருத்தானியாவில் ஓர் நடன பாடசாலை வளகத்திலே 3 சிறுமிகள் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர் தொடர்பான அடையாளங்கள் தவறான முறையில் பகிரப்பட்டது.குறித்த கொலையாளி 17வயதுடையவன் அவன் இஸ்லாமியன் என தீவிர வலதுசாரிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிரிட்டனில் பல பாகங்களில் வெறுப்பு போராட்டங்கள் வெடித்தன தொடர்ந்து கடைகள்,வீடுகள்,கார்கள் என்பன போராட்டக்காரர்களால் அழித்து சேதமாக்கப்பட்டது. இதுவரை 400 ற்கு மேற்பட்டவர்கள் நாடுமுழுவதிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள்நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.பிருத்தானியாவின் குடிவரவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் இந்த வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சாலைகளில் தீவிர வலதுசாரிகள் கடைகள்,வணிகநிறுவனங்களை தாக்கி கொள்ளையிடுவதையும்,போலீசாரை பட்டாசுகள் வைத்து தாக்குவதும்,”Islam Out” போன்ற வாசங்களை உச்சரித்தபடியும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முன்னிற்கும் கோட்பாடாக “இங்கிலாந்து ஆங்கிலேயருக்கே” என்பதாகும்.மேலும் வன்முறைகள் மூளாமல் இருக்க பிரதமர...

உக்ரேன் Vs ரஸ்யா போரால் சரிவடைந்த கனடாவின் பொருளாதாரம்.

  இந்த உக்ரேன் Vs ரஸ்யா போரானது February 20,2014 Cremea ( Crimean peninsula ) ரஸ்யா ஆக்கிரமித்ததிலிருந்து இந்த போரானது தொடங்குகிறது அதன் பின்னர் February 24 2022 ரஸ்யாவானது உக்ரேனை ஆக்கிரமித்ததிலிருந்து தற்போதுவரை இந்த போரானது நடைபெற்றுக்கொணடிருக்கிறது. இந்த போரால் இரண்டு நாடுகளுக்கும் பெரும் பொருளாதாரச்சேதமும்.உயிர்சேதமும் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.இந்த பதிவில் உக்ரேன் Vs ரஸ்யாவுடனான போரால் கனடாவின் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை நோக்குவோம். உக்ரேன் நாடானது ஐரோப்பாவில் ஏழ்மைநாடுகளில் ஒன்றாகும்.அத்துடன் இவ்நாட்டில் ஊழல்கள் அதிகமாக நடைபெறுகின்றன.உக்ரேன் உலகத்தின் ஆயுதங்களுக்கான கறுப்புச்சந்தையாக அறியப்படுகிறது.உலகின் பல பகுதிகளுக்கும் பல அமைப்புக்களுக்கும் ஆயுதங்களை வழங்கும் நாடாகவும் காணப்படுகிறது.கூலிக்காக கொலைசெய்யும் ராணுவத்தையும் கொண்டநாடு மிக முக்கியமாக விவசாயம் சார்ந்த உற்பத்திகளிலேயே தங்கிநிற்கிறது. இந்த உக்ரேன் 1991 வரை அன்றைய USSR (The union of Soviet socialist Republics) லிருந்து பிரிந்து 24,August 1991 தனிநாடாக பிரகடணப்படுத்தப்பட்டது.இந்த USSR லிருந்து...