Skip to main content

இலங்கையின் கிரிக்கட் சபை ICC ஆல் தற்காலிக நீக்கம்

 


இலங்கை கிரிக்கட் அணியானது ICC men Cricket World Cup 2023 இல் பங்குபற்றிய 9 போட்டிகளில் 2 இல் வெற்றி 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக இந்தியாவுடனான போட்டியில் 55 ரண்களுக்கு ஆட்டமிழந்து இந்தியாவானது 302 ரண்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. இதன் எதிரொலியாக இலங்கை கிரிக்கட் ரசிகள் இலங்கை கிரிக்கட்சபை முன்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர் இது நாடுமுழுவதும் பேசுபொருளானதை தொடர்ந்து, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்கே தற்போதைய Cricket board ஐ கலைத்து புதிதாக ஒரு Cricket board ஐ முன்னாள் உலக கோப்பை சாம்பியன் Arjuna Ranatunga தலைமையிலான புதிய குழு நியமிக்கப்பட்டது. இதனை எதிர்த்து முன்னாள் அணி தேர்வுக்குளு இந்த நடைமுறை செல்லுபடியாகாது என வழக்கு தொடுத்தனர் தற்போது அந்த வழக்கு நிலுவையிலுள்ளது. 


10/11/2023 இலங்கை நாடாளுமன்றில் இலங்கை கிரிக்கட்சபையில் உள்ள ஊழல் மோசடிகள் பக்கச்சார்பான தெரிவுமுறைகள், இலங்கை கிரிக்கெட்சபை தலைவர்முதல் அதிகாரிகளை நீக்கம் செய்யவேண்டும் என விவாதம் இடம் பெற்றிருந்தது. இந்தவிதமான வாக்கெடுப்புமின்றி இந்த பிரேரணை நிறைவேறியது. இதன் மூலம் முழுகட்டமைப்பையும் மாற்றி புதியதொரு கிரிக்கட் தெரிவுகுழுவை உருவாக்குவதே இந்த தீர்மானத்தின் நோக்கம் அத்துடன் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்கே ஊழல் ஒன்றை நாடாளுமன்றில் வெளிப்படுத்தியுள்ளார் அதாவது 2 million Dollar பணம் இலங்கை கிரிக்கட் சபைக்கு உரித்தான பணத்தினை தனியார் வங்கிக்கணக்குகளுக்கு மாற்றும் நடவடிக்கை நடந்துள்ளதாக கருத்துதெரிவித்தார். 


ICC இன் சட்டதிட்டங்களின்படி கிரிக்கட்டினுள் அரசியலை தொடர்புபடுத்துவது தவறாகும் அதனால் இன்றைய தினம் ICC council ஓர் தற்காலிக இடைநீக்கத்தை இலங்கை கிரிக்கட் அணிமீது விதித்துள்ளது. மேலும் கிரிக்கட் சபையினுள் ஊழல் மோசடிகள் அதன் தலைவர் மற்றும் அதிகாரிகள் கண்ணியமாக பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் எவரும் பதவி விலகலுக்கு தயாராஇல்லை ஆம் " கருவாட்டு ருசி கண்ட பூனைகள் அல்லவா" அதுவும் இலங்கை மக்களின் வரிப்பணத்தை தண்ணீர்போல் செலவு செய்தும் ஊழல் செய்தும் கொழுத்துப்போன பூனைகள். 

இவ்வாறு ICC ஆல் கிரிக்கட்சபைகள் இடை நீக்கப்படுவது முதல்முறையல்ல அரசியல் தலையீடுகள் காரணமாக Zimbabwe மற்றும் அமெரிக்க அணிகள் இடைநீக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். இலங்கையில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் இங்கே ஊழல்வாதிகளும் அதே இனம் அதனால் பாதித்து கொந்தளிப்பதும் அதே இனம் உலகெங்கிலும் தேடினாலும் இதூ போன்ற கேவலங்கள் எந்த நாட்டிலும் கிடையாது இலங்கை ஆசியாவின் ஆச்சரியம் இனி உலகின் ஆச்சரியம் அவமானம் எதுவேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா" 

Comments

Popular posts from this blog

UK Civil WAR பற்றி எரியும் பிரிட்டன்!!!

  பிருத்தானியாவில் ஓர் நடன பாடசாலை வளகத்திலே 3 சிறுமிகள் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர் தொடர்பான அடையாளங்கள் தவறான முறையில் பகிரப்பட்டது.குறித்த கொலையாளி 17வயதுடையவன் அவன் இஸ்லாமியன் என தீவிர வலதுசாரிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிரிட்டனில் பல பாகங்களில் வெறுப்பு போராட்டங்கள் வெடித்தன தொடர்ந்து கடைகள்,வீடுகள்,கார்கள் என்பன போராட்டக்காரர்களால் அழித்து சேதமாக்கப்பட்டது. இதுவரை 400 ற்கு மேற்பட்டவர்கள் நாடுமுழுவதிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள்நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.பிருத்தானியாவின் குடிவரவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் இந்த வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சாலைகளில் தீவிர வலதுசாரிகள் கடைகள்,வணிகநிறுவனங்களை தாக்கி கொள்ளையிடுவதையும்,போலீசாரை பட்டாசுகள் வைத்து தாக்குவதும்,”Islam Out” போன்ற வாசங்களை உச்சரித்தபடியும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முன்னிற்கும் கோட்பாடாக “இங்கிலாந்து ஆங்கிலேயருக்கே” என்பதாகும்.மேலும் வன்முறைகள் மூளாமல் இருக்க பிரதமர...

St. Paul இடைத்தேர்தலில் Don Stewart வெற்றி 30 வருட Liberals கோட்டை தகர்ப்பு

    கனடா மக்கள் அதிகம் எதிர்பார்த்த விடயங்களில் இந்த இடைத்தேர்தல் மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. கடந்த 30 வருடங்களாக liberal கட்சியின் பலம் பொருந்திய கோட்டையாக St. Paul இருந்துவந்தது. கனடா முழுவதும் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்தி நிலை இருந்துவரும் நிலையில் குறிப்பாக liberals ன் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டிநிற்கும் என எதிர்பார்க்கப்பட்டது அது போலவே மக்கள் மாற்றத்தை விரும்பி Conservative கட்சியை தெரிவு செய்துள்ளனர். இந்த முடிவானது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளை எதிரொலிப்பதாக உள்ளது. கடந்த பதிவில் தேர்தல் கருத்துக்கணிப்புக்கள் கனடா மாற்றத்தை விரும்புகிறது எனபதை குறிப்பிட்டிருந்தேன்."ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது போல் liberal கட்சியானது அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பாக Ontario மாகாணத்தில் Toronto போன்ற பகுதிகளில் மிகப்பெரும் தோல்விகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட Leslie church ஐ காட்டிலும் 590 வாக்குகள் அதிகம் பெற்று co...

உக்ரேன் Vs ரஸ்யா போரால் சரிவடைந்த கனடாவின் பொருளாதாரம்.

  இந்த உக்ரேன் Vs ரஸ்யா போரானது February 20,2014 Cremea ( Crimean peninsula ) ரஸ்யா ஆக்கிரமித்ததிலிருந்து இந்த போரானது தொடங்குகிறது அதன் பின்னர் February 24 2022 ரஸ்யாவானது உக்ரேனை ஆக்கிரமித்ததிலிருந்து தற்போதுவரை இந்த போரானது நடைபெற்றுக்கொணடிருக்கிறது. இந்த போரால் இரண்டு நாடுகளுக்கும் பெரும் பொருளாதாரச்சேதமும்.உயிர்சேதமும் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.இந்த பதிவில் உக்ரேன் Vs ரஸ்யாவுடனான போரால் கனடாவின் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை நோக்குவோம். உக்ரேன் நாடானது ஐரோப்பாவில் ஏழ்மைநாடுகளில் ஒன்றாகும்.அத்துடன் இவ்நாட்டில் ஊழல்கள் அதிகமாக நடைபெறுகின்றன.உக்ரேன் உலகத்தின் ஆயுதங்களுக்கான கறுப்புச்சந்தையாக அறியப்படுகிறது.உலகின் பல பகுதிகளுக்கும் பல அமைப்புக்களுக்கும் ஆயுதங்களை வழங்கும் நாடாகவும் காணப்படுகிறது.கூலிக்காக கொலைசெய்யும் ராணுவத்தையும் கொண்டநாடு மிக முக்கியமாக விவசாயம் சார்ந்த உற்பத்திகளிலேயே தங்கிநிற்கிறது. இந்த உக்ரேன் 1991 வரை அன்றைய USSR (The union of Soviet socialist Republics) லிருந்து பிரிந்து 24,August 1991 தனிநாடாக பிரகடணப்படுத்தப்பட்டது.இந்த USSR லிருந்து...