Skip to main content

"கனடாவில் இனி International Students படித்துவிட்டு நாடு திரும்பவேண்டியது தான்" கனடா எதிர்கட்சி தலைவர் Pierre Poilievre கருத்து!!!

 



கனடாவில் குடியேறவேண்டுமென்பது பல இலட்சக்கணக்கானவர்களின் கனவு அதில் பலவழிகளை  பின்பற்றி அந்த கனவை மக்கள் பூர்த்திசெய்து கொள்கின்றனர். இதில் வேலைதேடி கனடாவருபவர்கள் மற்றும் உயர்கல்விவேண்டி கனடா வருபவர்கள் மிக அதிகம், இவ்வாறு கனடாவினுள்வருபவர்களால் கனடா அரசுக்கு பல நன்மைகள் கிடைப்பதுடன் சில பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. அதில் குறிப்பிடத்தக்க வகையில் international students ஐ ஆண்டுக்கு அதிகமாக உள்வாங்குகின்றது இந்த எண்ணிக்கை வருடாவருடம் மிகஅதிகமாக உயர்ந்துவருகிறது. இதனால் இங்கு கல்விக்காக வரும் மாணவர்கள் தங்குமிடங்களுக்கான கேள்வியை அதிகரிக்கின்றனர் இதனால் கனடா மக்களும் மாணவர்களும் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். 

வேறு எந்த உலகநாடுகளையும் ஒப்பிடும்போது  கனடாவினுள் மாணவராக நுளைந்து நிரந்தர குடியுரிமையை இலகுவாக பெறமுடியும் அதனால் உலகளவில் பலர் மாணவர்களாக கனடாவருவதற்கு எத்தனிக்கின்றனர். இதனை பயன்படுத்தி பல மோசடிக்காரர்கள் மாணவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுவருகின்றனர். சரி இதற்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் நினைக்கக்கூடும், காரணம் இருக்கிறது தற்போதைய கனடாவின் எதிர்க்கட்சி தலைவர் Pierre Poilievre ஒரு மக்கள் சந்திப்பில் அவர் அளித்த தேர்தல் வாக்குறுதி பலாயிரம் international Students ஐ கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளதுடன் கனடா மக்கள் இந்த வாக்குறுதியை பெரிதும் வரவேற்கின்றனர். 

அவர் குறிப்பிட்டதாவது " international students களை குறிவைத்து நடக்கும் மோசடிகளை முடிவுக்கு கொண்டுவரும் வகையிலும் இனி வரும் காலத்தில் international student படித்து முடித்துவிட்டு தங்கள் நாட்டிற்கே திரும்பி செல்லவேண்டும் இங்கே அவர்கள் தங்கள் வாழ்க்கையை தொடரமுடியாது மற்றும் international students களால் வீடு/ தங்குமிடங்களின் வாடைகைகள்மிக உயர்வடைந்துள்ளது இதனால் கனடிய மக்கள் பெரும் துன்பத்தை அனுபவிக்கிறார்கள் அதனை கருத்தில் கொண்டு இனி தேர்தலில் வெற்றிபெற்றால் நான் இதனை நிறைவேற்றுவேன் என குறிப்பிட்டார்" 

இதனை கனடிய மக்கள் வரவேற்றுள்ளனர் அத்துடன் அடுத்த பிரதமராக இவர் வருவதற்கு சாத்தியக்கூறுகள் மிக மிக அதிகம் என்பதால் தற்போதுள்ள மாணவர்கள் கவலையடைந்துள்ளனர். காரணம் அவர்கள் நினைத்தபடி இனி படித்துமுடித்துவிட்டு வேலை ஒன்றை பெற்று நிரந்தர குடியுரிமையை பெறுவது சாத்தியமற்றது அதனால் அவர்கள் திரும்பி தங்கள் தாய்நாட்டிற்கு செல்ல அதிக வாய்ப்புக்கள் உள்ளன. 

Comments

Popular posts from this blog

St. Paul இடைத்தேர்தலில் Don Stewart வெற்றி 30 வருட Liberals கோட்டை தகர்ப்பு

    கனடா மக்கள் அதிகம் எதிர்பார்த்த விடயங்களில் இந்த இடைத்தேர்தல் மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. கடந்த 30 வருடங்களாக liberal கட்சியின் பலம் பொருந்திய கோட்டையாக St. Paul இருந்துவந்தது. கனடா முழுவதும் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்தி நிலை இருந்துவரும் நிலையில் குறிப்பாக liberals ன் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டிநிற்கும் என எதிர்பார்க்கப்பட்டது அது போலவே மக்கள் மாற்றத்தை விரும்பி Conservative கட்சியை தெரிவு செய்துள்ளனர். இந்த முடிவானது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளை எதிரொலிப்பதாக உள்ளது. கடந்த பதிவில் தேர்தல் கருத்துக்கணிப்புக்கள் கனடா மாற்றத்தை விரும்புகிறது எனபதை குறிப்பிட்டிருந்தேன்."ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது போல் liberal கட்சியானது அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பாக Ontario மாகாணத்தில் Toronto போன்ற பகுதிகளில் மிகப்பெரும் தோல்விகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட Leslie church ஐ காட்டிலும் 590 வாக்குகள் அதிகம் பெற்று co...

UK Civil WAR பற்றி எரியும் பிரிட்டன்!!!

  பிருத்தானியாவில் ஓர் நடன பாடசாலை வளகத்திலே 3 சிறுமிகள் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர் தொடர்பான அடையாளங்கள் தவறான முறையில் பகிரப்பட்டது.குறித்த கொலையாளி 17வயதுடையவன் அவன் இஸ்லாமியன் என தீவிர வலதுசாரிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிரிட்டனில் பல பாகங்களில் வெறுப்பு போராட்டங்கள் வெடித்தன தொடர்ந்து கடைகள்,வீடுகள்,கார்கள் என்பன போராட்டக்காரர்களால் அழித்து சேதமாக்கப்பட்டது. இதுவரை 400 ற்கு மேற்பட்டவர்கள் நாடுமுழுவதிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள்நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.பிருத்தானியாவின் குடிவரவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் இந்த வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சாலைகளில் தீவிர வலதுசாரிகள் கடைகள்,வணிகநிறுவனங்களை தாக்கி கொள்ளையிடுவதையும்,போலீசாரை பட்டாசுகள் வைத்து தாக்குவதும்,”Islam Out” போன்ற வாசங்களை உச்சரித்தபடியும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முன்னிற்கும் கோட்பாடாக “இங்கிலாந்து ஆங்கிலேயருக்கே” என்பதாகும்.மேலும் வன்முறைகள் மூளாமல் இருக்க பிரதமர...

உக்ரேன் Vs ரஸ்யா போரால் சரிவடைந்த கனடாவின் பொருளாதாரம்.

  இந்த உக்ரேன் Vs ரஸ்யா போரானது February 20,2014 Cremea ( Crimean peninsula ) ரஸ்யா ஆக்கிரமித்ததிலிருந்து இந்த போரானது தொடங்குகிறது அதன் பின்னர் February 24 2022 ரஸ்யாவானது உக்ரேனை ஆக்கிரமித்ததிலிருந்து தற்போதுவரை இந்த போரானது நடைபெற்றுக்கொணடிருக்கிறது. இந்த போரால் இரண்டு நாடுகளுக்கும் பெரும் பொருளாதாரச்சேதமும்.உயிர்சேதமும் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.இந்த பதிவில் உக்ரேன் Vs ரஸ்யாவுடனான போரால் கனடாவின் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை நோக்குவோம். உக்ரேன் நாடானது ஐரோப்பாவில் ஏழ்மைநாடுகளில் ஒன்றாகும்.அத்துடன் இவ்நாட்டில் ஊழல்கள் அதிகமாக நடைபெறுகின்றன.உக்ரேன் உலகத்தின் ஆயுதங்களுக்கான கறுப்புச்சந்தையாக அறியப்படுகிறது.உலகின் பல பகுதிகளுக்கும் பல அமைப்புக்களுக்கும் ஆயுதங்களை வழங்கும் நாடாகவும் காணப்படுகிறது.கூலிக்காக கொலைசெய்யும் ராணுவத்தையும் கொண்டநாடு மிக முக்கியமாக விவசாயம் சார்ந்த உற்பத்திகளிலேயே தங்கிநிற்கிறது. இந்த உக்ரேன் 1991 வரை அன்றைய USSR (The union of Soviet socialist Republics) லிருந்து பிரிந்து 24,August 1991 தனிநாடாக பிரகடணப்படுத்தப்பட்டது.இந்த USSR லிருந்து...