Skip to main content

The Benefits of regular exercise

 


இந்த பரபரப்பான இயந்தியமயமாகிப்போன வாழ்க்கையில் நாம் சரியான உணவு,நித்திரை, உடற்பயிற்சி என்பவற்றை தவிர்த்துவிடுகிறோம். இதனால் உடல்பருமன்,பல்வேறுபட்ட நோய்கள்,மனஅழத்தம் என்பவற்றுக்கு ஆளாகின்றோம்.நாம் எவ்வளவு ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொண்டு தேவையான அளவு நேரம் நித்திரை செய்தாலும் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. உங்களில் எத்தனை பேர் தினமும் உடற்பயிற்ச்சி செய்கிறீர்கள்? நாம் எல்லாவற்றுக்கும் காரணம் ஒன்றை வைத்துள்ளோம் அதுதான் நேரம் இல்லை என்பது. தற்போது பலர் உடற்பயிற்ச்சி இன்மையால் பல துன்பங்களை அனுபவிக்கிறார்கள் ஒரு நாளில் 30 நிமிடங்களை ஒதுக்கி நடைபயிர்ச்சி செய்வது மிகவும் நல்லது.


இனி உடற்பயிற்ச்சி செய்வதால் எமக்கு கிடைக்கும் பலன்களை பார்ப்போம் 

  1. உடல் எடையை கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க முடியும்
  2. மூளை சம்பந்தமான நோய்களிலிருந்து விலகியிருக்கலாம்
  3. தசைகள் என்புகளின்பலம்  அதிகரிக்கும்
  4. உங்கள் நாளாந்த வேலைகளை செய்வதற்கான ஆற்றல் மற்றும் சுறுசுறுப்பு அதிகரிக்கும்
  5. உடலில் சக்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்
  6. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்
  7. Cholesterol அளவு கட்டுக்குள் இருக்கும் இதயத்தின் ஆரோக்கியம் பேணப்படும்
  8. தினமும் நிம்மதியான நித்திரை 
  9. உங்கள் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும் 
  10. உணவு சமிபாடு சிறப்பாக அமையும்
  11. ஞாபகசக்தி மற்றும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் அதிகரிக்கும்
  12. பதட்டம் பயம் போன்றவற்றிலிருந்து விடுதலை
  13. மகிழ்ச்சி தன்னம்பிக்கை அதிகரிக்கும்
  14. நீண்ட ஆயுள் ஆரோக்கியமான வாழ்க்கை
இவ்வாறான பலன்களை பெறமுடியும் தினமும் உடற்பயிற்ச்சி செய்ய முடியாவிட்டாலும் நேரம் கிடைக்கும் பொழுதும் வாரஇறுதி நாட்களிலும் நீங்கள் தவறாமல் உடற்பயிற்ச்சி செய்யலாம் குறைந்த அளவு நடைபயிற்சி மற்றும் நீர் அருந்துவது வார இறுதியில் நண்பர்களை சந்தித்து உரையாடுவது உளஆரோக்கியத்துக்கும் பயனுள்ளதாக அமையும். உடல் ஆரோக்கியமே மிக முக்கியமானதாகும் 



Comments

Popular posts from this blog

உக்ரேன் Vs ரஸ்யா போரால் சரிவடைந்த கனடாவின் பொருளாதாரம்.

  இந்த உக்ரேன் Vs ரஸ்யா போரானது February 20,2014 Cremea ( Crimean peninsula ) ரஸ்யா ஆக்கிரமித்ததிலிருந்து இந்த போரானது தொடங்குகிறது அதன் பின்னர் February 24 2022 ரஸ்யாவானது உக்ரேனை ஆக்கிரமித்ததிலிருந்து தற்போதுவரை இந்த போரானது நடைபெற்றுக்கொணடிருக்கிறது. இந்த போரால் இரண்டு நாடுகளுக்கும் பெரும் பொருளாதாரச்சேதமும்.உயிர்சேதமும் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.இந்த பதிவில் உக்ரேன் Vs ரஸ்யாவுடனான போரால் கனடாவின் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை நோக்குவோம். உக்ரேன் நாடானது ஐரோப்பாவில் ஏழ்மைநாடுகளில் ஒன்றாகும்.அத்துடன் இவ்நாட்டில் ஊழல்கள் அதிகமாக நடைபெறுகின்றன.உக்ரேன் உலகத்தின் ஆயுதங்களுக்கான கறுப்புச்சந்தையாக அறியப்படுகிறது.உலகின் பல பகுதிகளுக்கும் பல அமைப்புக்களுக்கும் ஆயுதங்களை வழங்கும் நாடாகவும் காணப்படுகிறது.கூலிக்காக கொலைசெய்யும் ராணுவத்தையும் கொண்டநாடு மிக முக்கியமாக விவசாயம் சார்ந்த உற்பத்திகளிலேயே தங்கிநிற்கிறது. இந்த உக்ரேன் 1991 வரை அன்றைய USSR (The union of Soviet socialist Republics) லிருந்து பிரிந்து 24,August 1991 தனிநாடாக பிரகடணப்படுத்தப்பட்டது.இந்த USSR லிருந்து...

St. Paul இடைத்தேர்தலில் Don Stewart வெற்றி 30 வருட Liberals கோட்டை தகர்ப்பு

    கனடா மக்கள் அதிகம் எதிர்பார்த்த விடயங்களில் இந்த இடைத்தேர்தல் மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. கடந்த 30 வருடங்களாக liberal கட்சியின் பலம் பொருந்திய கோட்டையாக St. Paul இருந்துவந்தது. கனடா முழுவதும் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்தி நிலை இருந்துவரும் நிலையில் குறிப்பாக liberals ன் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டிநிற்கும் என எதிர்பார்க்கப்பட்டது அது போலவே மக்கள் மாற்றத்தை விரும்பி Conservative கட்சியை தெரிவு செய்துள்ளனர். இந்த முடிவானது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளை எதிரொலிப்பதாக உள்ளது. கடந்த பதிவில் தேர்தல் கருத்துக்கணிப்புக்கள் கனடா மாற்றத்தை விரும்புகிறது எனபதை குறிப்பிட்டிருந்தேன்."ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது போல் liberal கட்சியானது அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பாக Ontario மாகாணத்தில் Toronto போன்ற பகுதிகளில் மிகப்பெரும் தோல்விகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட Leslie church ஐ காட்டிலும் 590 வாக்குகள் அதிகம் பெற்று co...

UK Civil WAR பற்றி எரியும் பிரிட்டன்!!!

  பிருத்தானியாவில் ஓர் நடன பாடசாலை வளகத்திலே 3 சிறுமிகள் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர் தொடர்பான அடையாளங்கள் தவறான முறையில் பகிரப்பட்டது.குறித்த கொலையாளி 17வயதுடையவன் அவன் இஸ்லாமியன் என தீவிர வலதுசாரிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிரிட்டனில் பல பாகங்களில் வெறுப்பு போராட்டங்கள் வெடித்தன தொடர்ந்து கடைகள்,வீடுகள்,கார்கள் என்பன போராட்டக்காரர்களால் அழித்து சேதமாக்கப்பட்டது. இதுவரை 400 ற்கு மேற்பட்டவர்கள் நாடுமுழுவதிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள்நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.பிருத்தானியாவின் குடிவரவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் இந்த வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சாலைகளில் தீவிர வலதுசாரிகள் கடைகள்,வணிகநிறுவனங்களை தாக்கி கொள்ளையிடுவதையும்,போலீசாரை பட்டாசுகள் வைத்து தாக்குவதும்,”Islam Out” போன்ற வாசங்களை உச்சரித்தபடியும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முன்னிற்கும் கோட்பாடாக “இங்கிலாந்து ஆங்கிலேயருக்கே” என்பதாகும்.மேலும் வன்முறைகள் மூளாமல் இருக்க பிரதமர...