Skip to main content

ஐரோப்பாவிலிருந்து பற்றிய வலதுசாரிகள் எனும் தீ வீழ்சியடையும் liberals


 

கனடாவானது மிகப்பெரிய பொருளாதார மற்றும் அரசியல் சிக்கலில் சிக்கியுள்ளது.கணிசமான கனடிய மக்கள் கனடாவைவிட்டு வெளியேறிக்கொண்டிருப்பது சமூக வலைதளங்களில் பேசுபடுபொருளாக உள்ளது.கனடாவின் பிரதமருக்கான தேர்த்தல் கருத்துக்கணிப்புகள் வெளியாகி தற்போதுள்ள அரசாங்கத்தின் உண்மைநிலையை வெளிக்காட்டியுள்ளது.வீட்டுவாடகை,அத்தியாவசிய பொருட்களின் விலைஏற்றம்,அதிகரித்த குடிவரவு,வாழ்க்கை தரமானது வீழ்ச்சியடைந்துள்ளமை,மருத்துவமனைகள் மக்களின் வரிசை,அதிகரித்த வரி என கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் மீது கடும் வெறுப்பில் உள்ளனர் அதனையே கருத்துக்கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றது.


16 june 2024 அன்று வெளியான அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கான கருத்துக்கணிப்பின் படி தற்போது ஆளும் கட்சியான Liberal கட்சி 4 ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன்படி 


Conservative கட்சியானது 223 ஆசனங்களை பெறும் என கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.கனடாவின் பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 338 ஆகும் இதில் 170 ஆசங்களை பெறும் கட்சியானது ஆட்சியமைக்கமுடியும். 2025 ல் தேர்தல் நடைபெறுவதற்கு 15 மாதங்கள் இருக்கும் நிலையில் இவ்வாறான கருத்துக்கணிப்பு ஆளும் கட்சியை கதிகலங்க வைத்துள்ளது இதன்மூலம் Conservative கட்சியானது மிகப்பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதில் குறிப்பிடத்தக்க விடயமாக NDP (New Democratic Party) ஆனது  தனது மக்கள் ஆதரவை பெருக்கிக்கொண்டிருக்கிறது. இடதுசாரியான Liberals இதுவரை கனடியர்கள் பெரும் ஆதரவை பெற்று தொடர்ந்து ஆட்சியிலிருந்தனர் ஆனால் தற்போது அவர்கள் நிலையானது எதிர்வரும் தேர்தலில் 20% வாக்கு சதவீதத்தை எட்டுவதே கடினம் என்பதே நிதர்சனமாகும். Conservative ஆனது வலது சாரிகளாகும் அவர்கள் கனடிய மக்களின் உரிமைகளுக்கே முன்னுரிமை வழங்குவார்கள்,சட்டங்கள் கடுமையாக்கப்படும்,கனடாவிற்கு குடிபெயர நினைப்பவர்கள் நிலை நிட்சயம் கடினமானதாகவே அமையும்.கனடிய சட்டங்களை ஏமாற்றுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்,கனடியர்களுக்கு முன்னுரிமை,வேலைவாய்ப்பு அதிகரித்து வரிகள் சீர்செய்யப்படும்.Liberals மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொள்ளும் தேர்தலாக நிட்சம் இது அமையும் கனடா மாற்றத்தை விரும்புகிறது கனடியர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். 


Comments

Popular posts from this blog

St. Paul இடைத்தேர்தலில் Don Stewart வெற்றி 30 வருட Liberals கோட்டை தகர்ப்பு

    கனடா மக்கள் அதிகம் எதிர்பார்த்த விடயங்களில் இந்த இடைத்தேர்தல் மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. கடந்த 30 வருடங்களாக liberal கட்சியின் பலம் பொருந்திய கோட்டையாக St. Paul இருந்துவந்தது. கனடா முழுவதும் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்தி நிலை இருந்துவரும் நிலையில் குறிப்பாக liberals ன் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டிநிற்கும் என எதிர்பார்க்கப்பட்டது அது போலவே மக்கள் மாற்றத்தை விரும்பி Conservative கட்சியை தெரிவு செய்துள்ளனர். இந்த முடிவானது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளை எதிரொலிப்பதாக உள்ளது. கடந்த பதிவில் தேர்தல் கருத்துக்கணிப்புக்கள் கனடா மாற்றத்தை விரும்புகிறது எனபதை குறிப்பிட்டிருந்தேன்."ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது போல் liberal கட்சியானது அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பாக Ontario மாகாணத்தில் Toronto போன்ற பகுதிகளில் மிகப்பெரும் தோல்விகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட Leslie church ஐ காட்டிலும் 590 வாக்குகள் அதிகம் பெற்று co...

UK Civil WAR பற்றி எரியும் பிரிட்டன்!!!

  பிருத்தானியாவில் ஓர் நடன பாடசாலை வளகத்திலே 3 சிறுமிகள் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து சந்தேக நபர் தொடர்பான அடையாளங்கள் தவறான முறையில் பகிரப்பட்டது.குறித்த கொலையாளி 17வயதுடையவன் அவன் இஸ்லாமியன் என தீவிர வலதுசாரிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிரிட்டனில் பல பாகங்களில் வெறுப்பு போராட்டங்கள் வெடித்தன தொடர்ந்து கடைகள்,வீடுகள்,கார்கள் என்பன போராட்டக்காரர்களால் அழித்து சேதமாக்கப்பட்டது. இதுவரை 400 ற்கு மேற்பட்டவர்கள் நாடுமுழுவதிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்கள்நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.பிருத்தானியாவின் குடிவரவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் இந்த வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சாலைகளில் தீவிர வலதுசாரிகள் கடைகள்,வணிகநிறுவனங்களை தாக்கி கொள்ளையிடுவதையும்,போலீசாரை பட்டாசுகள் வைத்து தாக்குவதும்,”Islam Out” போன்ற வாசங்களை உச்சரித்தபடியும் வன்முறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முன்னிற்கும் கோட்பாடாக “இங்கிலாந்து ஆங்கிலேயருக்கே” என்பதாகும்.மேலும் வன்முறைகள் மூளாமல் இருக்க பிரதமர...

உக்ரேன் Vs ரஸ்யா போரால் சரிவடைந்த கனடாவின் பொருளாதாரம்.

  இந்த உக்ரேன் Vs ரஸ்யா போரானது February 20,2014 Cremea ( Crimean peninsula ) ரஸ்யா ஆக்கிரமித்ததிலிருந்து இந்த போரானது தொடங்குகிறது அதன் பின்னர் February 24 2022 ரஸ்யாவானது உக்ரேனை ஆக்கிரமித்ததிலிருந்து தற்போதுவரை இந்த போரானது நடைபெற்றுக்கொணடிருக்கிறது. இந்த போரால் இரண்டு நாடுகளுக்கும் பெரும் பொருளாதாரச்சேதமும்.உயிர்சேதமும் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.இந்த பதிவில் உக்ரேன் Vs ரஸ்யாவுடனான போரால் கனடாவின் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை நோக்குவோம். உக்ரேன் நாடானது ஐரோப்பாவில் ஏழ்மைநாடுகளில் ஒன்றாகும்.அத்துடன் இவ்நாட்டில் ஊழல்கள் அதிகமாக நடைபெறுகின்றன.உக்ரேன் உலகத்தின் ஆயுதங்களுக்கான கறுப்புச்சந்தையாக அறியப்படுகிறது.உலகின் பல பகுதிகளுக்கும் பல அமைப்புக்களுக்கும் ஆயுதங்களை வழங்கும் நாடாகவும் காணப்படுகிறது.கூலிக்காக கொலைசெய்யும் ராணுவத்தையும் கொண்டநாடு மிக முக்கியமாக விவசாயம் சார்ந்த உற்பத்திகளிலேயே தங்கிநிற்கிறது. இந்த உக்ரேன் 1991 வரை அன்றைய USSR (The union of Soviet socialist Republics) லிருந்து பிரிந்து 24,August 1991 தனிநாடாக பிரகடணப்படுத்தப்பட்டது.இந்த USSR லிருந்து...